Breaking News

உலக குடிநீர் தின நிகழ்ச்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் உலக குடிநீர் தினத்தை சிறப்பித்து இன்று(22.03.2023) உலக குடிநீர் தின நிகழ்ச்சி இடம்பெற்றது.

பாடசாலையின் சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது, குடிநீரின் முக்கியத்துவம் குறித்த சித்திரப்போட்டி நடாத்தப்பட்டமையுடன் அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் சித்திரக்கண்காட்சி நடைபெற்றதுடன் விழிப்புணர்வு கருத்துக்களும் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்டன.










No comments