தலைமைத்துவப்பயிற்சி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தலைமைத்துவப்பயிற்சி இடம்பெற்றது (17,18.04.2025)
வி;த்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இப்பயிற்சியில் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 6 – 11 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, மாணவர்களின் உள, உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேணுதவற்கான பயிற்சிகள், கூட்டாக செயற்படுதல், ஆபத்துக்களில் இருந்து தப்பிக்கொள்ளல், சவால்களை எதிர்கொள்ளல், சிறந்த தலைவர்களாக செயற்படுதல் போன்ற பல்வேறான பயிற்சிகள் விளையாட்டின் ஊடாகவும், செய்முறைகள் ஊடாகவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
வித்தியாலய ஆசிரியர் இ.குகநாதன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தலைமைத்துவப் பயிற்சியில் வளவாளர்களாக கிழக்குப்பல்கலைக்கழக நுண்லைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி விவேகானந்தராசா, நுண்கலை பட்டதாரிகள், பாடசாலையின் ஆசிரியர்களான ம.கேதீஸ்வரன், ம.சிந்துகரன், அயல்பாடசாலை ஆசிரியர் நந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![]() |
No comments