மாணவர் பாராளுமன்ற தேர்தல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(11.04.2025) மாணவர் பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைய இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் வித்தியாலய சமூகவிஞ்ஞானப் பாட ஆசிரியர் துலஸ் ரவிகரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இத்தேர்தலில் பாடசாலை ஆசிரியர்கள் வாக்கெடுப்பு பணியையும், வாக்கெண்ணும் பணியையும் மேற்கொண்டனர்.
Post Comment
No comments