மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்ச்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கலும், சின்னம் சூட்டும் நிகழ்ச்சியும் இன்று(02.05.2025 இடம்பெற்றது. நேர்முகத்தேர்வின் போது பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை வித்தியாலய அதிபர் வ.துசாந்தன், பிரதி அதிபர் கு.கந்தசாமி, மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கி வைத்தனர். இதன்போது மாணவர்கள் நியமனத்தினை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர்.

பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக மாணவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் சிறந்ததொரு தலைவர்களை உருவாக்கும் பொருட்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.






No comments