சித்திரை வருடக் கொண்டாட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சித்திரைக்கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று (02.05.2025 இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் வ.துசாந்தன் தலைமையில், ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
மாணவர்களுக்கு அரப்புநீர் வைக்கப்பட்டு, பெற்றோர்களினால் செய்யப்பட்ட இனிப்புப்பண்டங்கள் பூசைக்காக வைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதன்போது, பாடசாலை சூழலில் உள்ள கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்
Post Comment
No comments