மாணவர் பாராளுமன்ற அமர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு இன்று(30.04.2025) இடம்பெற்றது.
பாடசாலை மாணவர் பாராளுமன்றத்திற்காக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இச்சபையில் அங்கத்துவம் வகித்தனர். அவ்வகையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற மாணவன் பா.ரினேச்சயன், இரண்டாவது விருப்பு வாக்குகளைப் பெற்ற மாணவன் ஜெ.கேருஜன் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டதுடன், அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
குறித்த அமர்வினை வித்தியாலய சமூகவிஞ்ஞானப்பாட ஆசிரியர் துலஸ் ரவிகரன் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தார். இதன்போது ஒவ்வொருவரும் தாங்கள் முன்வைக்க உள்ள செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
அமர்வின் பின்னர் வித்தியாலய அதிபர் கருத்து முன்வைக்கையில், இவ்வமர்வினை மாதாந்தம் நடாத்துவதன் ஊடாக பாடசாலையில் உள்ள பல்வேறான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தமையுடன், மாதாந்தோறும் நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், இதற்கான சகல உதவிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். மேலும் இவ்வமர்வின் மூலம் மாணவர்களின் ஒழுக்க விழுமிய செயற்பாடுபடுகளை வலுப்படுத்தக்கூடியதாக உள்ளதாகவும், நேர்சிந்தனை கொண்ட ஆளுமையான மாணவர்களை உருவாக்க கூடியதாகவிருக்கும் எனவும், பேச்சாற்றலை விருத்தி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
Post Comment
No comments