மாணவர் அடைவு, இணைப்பாடவிதான செயற்பாடு தொடர்பான ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு பெற்றோர்களுக்கான ஒன்றுகூடல் இன்று(30.04.2025) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில், ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் இக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அதிபர், பாடசாலையில் கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்கு இணையாக இணைப்பாடவிதான செயற்பாட்டினையும் சமமாக கொண்டு செல்ல வேண்டியது பாடசாலையின் கடமையாகும். கற்றல், கற்பித்தலை விருத்தி செய்வதன் ஊடாக உரிய பாடங்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கச் செய்ய முடியும். அதே போன்று இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துகின்ற போது மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்ய முடியும். இதற்காக பெற்றோர்கள் பாட அடைவு மட்டத்தினை விருத்தி செயவதற்காக பாடசாலைக்கு பிள்ளைகளை தினசரி அனுப்புதல், வீட்டுவேலைகளை செய்துவருவதற்கு ஊக்கப்படுத்தல், மாணவர்களின் பயிற்சி கொப்பிகளைப் பார்வையிடுதல், சுயகற்றலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் பாடசாலையில் இடம்பெறும் அனைத்து இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஆர்வம்காட்ட வேண்டும் என்றார்.








No comments