தரம் 11மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 11மாணவர்களின் அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடான கலந்துரையாடல் இன்று(27.02.2025) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாணவர்கள் இறுதியாகப் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமையுடன் உயர்தர கற்றல், கற்பித்தல் செயற்பாடு தொடர்பிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
Post Comment
No comments