சாரணர் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சாரணர் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 19.07.2024ஆம் திகதி நடைபெற்றது. சாரணர் பொறுப்பாசிரியர் ம.கேதீஸ்வரன் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன், ஆசிரிய ஆலோசகர்களான பு.சதீஸ்குமார், ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நீண்ட காலத்தின் பின்னர் பாடசாலையில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது சின்னம் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments