போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 – 11வரையான மாணவர்களுக்கு போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வும், அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பிலான அறிவுறுத்தல் செயற்பாடும் பாடசாலையில் இன்று() இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வு செயற்பாட்டினை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக போதைதொழிப்பு தொடர்பிலான அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசாரா உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.
இதன்போது போதையினால் ஏற்படக்கூடிய விளைவு, அறநெறி கல்வியினால் பெறக்கூடிய அனுகூலங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.









No comments