Breaking News

கிராமங்கள் தோறும் பெற்றோர் சந்திப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் அடைவினை அதிகரிக்கும் பொருட்டும், வரவினை அதிகரிக்கும் நோக்கிலும் பெற்றோர் விழிப்புணர்வு செயற்பாடு இல்லங்கள், கிராமங்கள் தோறும் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. 

உப்புக்குளம், குருந்தையடிமுன்மாரி ஆகிய கிராமங்களில் 27.02.2026ஆம் திகதி இடம்பெற்றது. வித்தியாலய ஆசிரியர்களான சு.விஜயகுமார், ம.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








No comments