கவிதைப்பயிற்சி பட்டறை
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 9,10,11 மாணவர்களுக்கான கவிதைப்பயிற்சிப் பட்டறை இன்று(09.04.2025) முன்னெடுக்கப்பட்டது.
ஆக்க இலக்கியத்திறனை விருத்தி செய்யும் பொருட்டு வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
வளவாளராக கலாசார உத்தியோகத்தரும், கவிஞரும், எழுத்தாளருமான த.மலர்செல்வன் கலந்துகொண்டு இது தொடர்பிலான விளக்கத்தினையும் கற்பதற்கான அணுமுறை தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார். இறுதியில் மாணவர்களினால் கவிதை எழுதப்பட்டு உரிய வளவாளரிடம் காண்பிக்கப்பட்டன.
இதில் வித்தியாலய ஆசிரியர் சி.ஜெயகௌரி கலந்துகொண்டிருந்தார்.
No comments