மாணவர் தலைவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைய மாணவர் தலைவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று(25.04.2025) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபரின் வழிப்படுத்தலில் இரு நேர்முக சபைகள் உருவாக்கப்பட்டு நேர்முகத்தேர்வு இடம்பெற்றது. பாடசாலையின் வரலாற்றின் முதன்முறையாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மூலம் மாணவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்கான அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், நேர்சிந்தனையுடான செயற்பாடும், சிறந்த தலைமைத்துவவாதிகளை உருவாக்குவதற்குமான ஆரம்பமாக அமைகின்றதென வித்தியாலய அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.
Post Comment
No comments