பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று(11.02.2025) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பாடசாலையின் நோக்கம், தேசிய குறிக்கோள், எதிர்கால செயற்பாடுகள், இணைப்பாட விதானத்தில் மாணவர்களின் பங்கு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Post Comment
No comments