சிறுவர் தின நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(01.10.2024) சிறுவர் தின நிகழ்ச்சி இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பு.சதீஸ்குமார் கலந்துகொண்டார்.
இதன்போது மாணவர்களை ஆசிரியர்கள் கோலாட்டம் மற்றும் இன்னிய நடனத்துடன் வரவேற்றனர்.
இதன்போது மாணவர்களினால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டமையுடன் மாணவர்களினால் விதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
Post Comment
No comments