பரீட்சை பெறுபேற்றினை அதிகரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்.
கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 10,11 மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்கும் செய்யும் வகையிலான மாணவர்களுடனான கலந்துரையாடல் இன்று(31.10.2018) இடம்பெற்றது.வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் கலந்துகொண்டார்.



