உன்னிச்சைக்கான பயணம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் இன்று(08.08.2018) உன்னிச்சைக்குளத்தினை பார்வையிடுவதற்காக சென்றனர்.
களப்பயணங்கள் ஊடாக வாழ்க்கைக்கான அனுபவக்கற்றலையும், படிப்பினைகளையும், சூழலுக்கு இசைவாக்கம் அடைவதனையும், கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதனையும், வனப்பிரதேசங்களின் ஊடான போக்குவரத்தினையும், மகிழ்ச்சிகரமான பொழுதினையும், நீரில் குளித்தல், நீரில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றபோது அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான தந்திரோபாயங்களை அனுபவத்தின் ஊடாக கற்றுக்கொள்ளும் நோக்கில் இக்களப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.