கொல்லநுலையில் அநெறிப்பாடசாலை ஆரம்பித்து வைப்பு
ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தினை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லநுலையில் இந்துசமய அறநெறிப்பாடசாலை இன்று(25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொல்லநுலை சமூகத்தினர், கோயில் நிருவாகத்தினர், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய பாடசாலை நிருவாகத்தினர் இணைந்து அறநெறிப்பாடசாலையை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப நிகழ்வில், வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன், பிரதேச அறநெறிப்பாடசாலைகளின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மேகலா முகுந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.சுவாஸ்கரன், கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன் மற்றும் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Post Comment