விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் மெரிட்
கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய பாடசாலை மாணவன் மெரிட் சித்தியினை பெற்றுள்ளார்.
தரம் ஏழில் கல்வி பயிலும் சூரியகுமார் திவா என்ற மாணவனே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் இந்நிலை பெறப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டுத்தக்கதாகும்.



No comments