சாரண மாணவர்களுக்கு கலைச்சின்னம் சூட்டல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரண மாணவர்களுக்கு கலைச்சின்னம் இன்று(11) சூட்டப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் துவிச்சக்கரவண்டி பயணத்தினை நிறைவு செய்த மாணவர்களுக்கு இச்சின்னம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிமனையில் வைத்து இச்சின்னம் சூட்டப்பட்டது.
இதில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தினைச் சேர்ந்த 08சாரண மாணவர்கள் இச்சின்னத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
Post Comment
No comments