போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பெற்றோரிடம் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இணைப்பாடவிதானத்தில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் 10.07.2024 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. 2024இல் நடைபெற்ற இணைப்பாடவிதானப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியீட்டிய மாணவர்களின் சான்றிதழ்களே உரிய மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
Post Comment
No comments