வைகாசி மாதம் 100வீத வரவு கொண்ட மாணவர்கள் கௌரவிப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் வைகாசி மாதம் 100வீத வரவு வீதம் கொண்ட மாணவர்களை பாராட்டி பரிசில் வழங்கலும், பெற்றோரை மாலை அணிவித்து கௌரவித்தலும் நிகழ்ச்சி இன்று(26.05.2023) பாடசாலை மண்டபத்தில் அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, அதிக நூல்களை வாசித்த, அலகுப்பரீட்சையில் முதலிடங்களைப் பெற்ற, தரம் 5 மாணவர்களுக்கான விசேட பரீட்சையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களும் பரிசில் வழங்கி பாராட்டப்பட்டனர்.
இம்மாணவர்களுக்கான பரிசில்களை கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
Post Comment
No comments